’சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்’ - விமர்சனம்
- mediatalks001
- Jun 21
- 1 min read

லிவிங்ஸ்டனிடம் வேலை பார்க்கும் திருடர்களான வைபவ் மற்றும் மணிகண்டா ராஜேஷ் இருவரும் லிவிங்ஸ்டனுக்கு சிறுவயதில் செய்த ஒரு உதவிக்காக இருவரையும் அவ்வப்போது போலீசிடம் இருந்து காப்பாற்றுவதே வேலையாக வைத்திருக்கிறார் லிவிங்ஸ்டன்
பிரபல ரௌடியான சிஹான் ஹூசைனி இன்சூரன்ஸ் பணத்தை பெற வேண்டி போலியான திருட்டை நடத்த சொல்லி லிவிங்ஸ்டனிடம் பொறுப்பை ஒப்படைக்கிறார்.
இதனையடுத்து சிஹான் ஹூசைனியிடம் இருந்து 2 கோடி ரூபாயை பணத்தை வைபவ் மற்றும் மணிகண்டா ராஜேஷ் இருவரும் கொள்ளையடிக்கிறார்கள்.
வைபவ் மற்றும் மணிகண்டா ராஜேஷ் இருவரும் பணத்தை கொண்டு வரும் வழியில் பறி கொடுக்கிறார்கள்.
பறி கொடுத்த பணத்திற்காக முன்னாள் கொள்ளையர்களான ஆனந்தராஜ், ஜான் விஜய், மொட்டை ராஜேந்திரன் மற்றும் சுனில் ரெட்டி ஆகியோருடன் கூட்டு சேர்ந்து தனியார் வங்கி பணத்தை கொள்ளை அடிக்க திட்டம் போடுகிறார்கள்.
முடிவில் திட்டமிட்டபடி நாயகன் வைபவ் மற்றும் கூட்டாளிகள் சேர்ந்து வங்கி பணத்தை கொள்ளை அடித்தார்களா? சிஹான் ஹூசைனியிடம் பறி போன பணத்தை திருப்பி கொடுத்தார்களா? இல்லையா? என்பதைசொல்லும் படம்தான் ’சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்’
திருடனாக நடித்திருக்கும் நாயகன் வைபவ் இயல்பான நடிப்பில் காதல், ஆக்க்ஷன் , காமெடி என அனைத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
நாயகியாக அதுல்யா ரவி அழகாக வந்து அளவான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
நண்பனாக நடிக்கும் மணிகண்டா ராஜேஷ் ஞாபக மறதியாக வரும் மொட்டை ராஜேந்திரன், குடிகாரனாக வரும் சுனில், காது கேளாத, ஜான் விஜய், சைரன் சத்தம் கேட்டால் போலீஸாக மாறிவிடும் ஆனந்தராஜ் என படத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற தேர்வாக இருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் டி . இமான் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம் பின்னணி இசை கதையோடு பயணிக்கிறது.
டிஜோ டோமி ஒளிப்பதிவு கவனிக்க வைக்கிறது.
வங்கி பணத்தை கொள்ளையடிப்பதை மைய கருவாக வைத்து கதையில் எந்த லாஜிக் பார்க்காமல் முழுநீள காமெடி படமாக படத்தை உருவாக்கியிருக்கிறார்கள் விக்ரம் ராஜேஷ்வர் மற்றும் அருண் கேசவ்
ரேட்டிங் : 3 / 5
Comments