’ஆண்பாவம் பொல்லாதது’ - விமர்சனம்
- mediatalks001
- Nov 1
- 1 min read

சென்னையில் ஐ.டி கம்பெனியில் பணி புரியும் நாயகன் ரியோ ராஜிக்கு பெரியவர்கள் சம்மதத்துடன் நாயகி மாளவிகா மனோஜுடன் திருமணம் நடைபெறுகிறது.
திருமணத்திற்கு பிறகு அடுக்குமாடி குடியிருப்பில் மகிழ்ச்சியாக இருவரும் வாழ்ந்து வருகிறார்கள்.
சில மாதங்களுக்கு பின் ஈகோவால் இருவருக்குமிடையே ஏற்படும் பிரச்சனையால் மாளவிகா மனோஜ் கர்ப்பமாக இருப்பது ரியோ ராஜுக்கு தெரியாமல் இருப்பதால் அவரது கரு கலைந்து விடுகிறது.
இதனையடுத்து வக்கீல் ஷீலா துணையுடன் விவாகரத்து கேட்டு நாயகி மாளவிகா மனோஜ் நீதிமன்றத்திற்கு செல்கிறார்.
விவாகரத்து வேண்டாம் சேர்ந்து வாழ வேண்டும் என்று நினைக்கிறார் ரியோ ராஜ் இவருக்கு துணையாக வக்கீல் ஆர். ஜே. விக்னேஷ் காந்த், இருக்கிறார்.
முடிவில் ரியோ ராஜ் – மாளவிகா மனோஜ் இருவருக்கும் விவாகரத்து கிடைத்ததா ?
ரியோ ராஜ் நினைத்தபடி மாளவிகா மனோஜுடன் சேர்ந்து வாழ்ந்தாரா?
வக்கீல்கள் ஆர். ஜே. விக்னேஷ்காந்த் – ஷீலா இருவருக்குமான பிரச்சனை என்ன ? என்பதை சொல்லும் படம்தான் ’ஆண்பாவம் பொல்லாதது’
சிவா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரியோ ராஜ் இயல்பான நடிப்பால் காதல், காமெடி, செண்டிமெண்ட் என அனைத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் .
சக்தி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மாளவிகா மனோஜ் மிக சிறப்பான நடிப்பை வெளிபடுத்தியுள்ளார்.
வக்கீல்களாக நடித்திருக்கும் ஆர். ஜே. விக்னேஷ் காந்த் – ஷீலா இருவரும் கொடுத்த வேலையை குறைவில்லாமல் செய்திருக்கிறார்கள்.
ஆர். ஜே. விக்னேஷ் காந்தின் உதவியாளராக நடித்திருக்கும் நடிகர் ஜென்சன் திவாகர் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்திருக்கிறார்.
நாயகி மாளவிகா மனோஜ் அப்பாவாக நடித்திருக்கும் இயக்குநர் ஏ. வெங்கடேஷ் என மற்ற கதாபாத்திரத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற தேர்வாக இருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் சித்து குமார் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் உள்ளது.
மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைக்கும் வகையில் உள்ளது.
சமூக வலைத்தள ரீல்கள் மூலம் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனையை மைய கருவாக வைத்து இன்றைய சமூகத்திற்கு தேவையான ஒரு நல்ல கருத்தை அழுத்தமாக பதிவு செய்து படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் கலையரசன் தங்கவேல்.
ரேட்டிங் - 3 .5 / 5








Comments