top of page

’கும்கி 2’ - விமர்சனம்

  • mediatalks001
  • Nov 16, 2025
  • 1 min read

மலை சார்ந்த கிராமத்தில் வாழும் சிறுவன் நாயகன் மதி ஒரு நாள் பள்ளியில் இருந்து வீட்டிற்கு வரும் வழியில் யானை குட்டி ஒன்று பள்ளத்தில் விழுந்து இருப்பதை பார்த்து அந்த யானை குட்டியை காப்பாற்றுகிறான்.

அந்த குட்டி யானையை மதி காப்பாற்றிய நாள் முதல் அவரை சுற்றி சுற்றி வருகிறது.

பாசத்திற்காக ஏங்கும் மதி யானையின் பாசத்திற்கு அடிமையாகி அதை வளர்க்கிறார்.

யானையும், மதியும் வளர்ந்து சகோதரர்களைப் போல் எப்போதும் ஒன்றாகவே இருக்க, ஒருநாள் திடீரென்று யானை காணாமல் போய் விடுகிறது.

யானையை தேடி அலையும் மதி காணாமல் போன நினைவில் இருக்கும்போது ஆசிரியரின் அறிவுரையால் கல்லூரி படிப்புக்காக தன் ஊரை விட்டு செல்கிறார்.

சில வருடங்களுக்குப் பிறகு தன் சொந்த ஊருக்கு திரும்பும் மதிக்கு காணாமல் யானை பற்றிய தகவல் கிடைக்கிறது.


முடிவில் எந்த பிரச்சனை இல்லாமல் மதி யானையை கண்டுபிடித்தாரா?


யானை காணாமல் போனதற்கு காரணம் என்ன? என்பதை சொல்லும் படம்தான் ’கும்கி 2’


நாயகனாக நடித்திருக்கும் அறிமுக நடிகர் மதி இயல்பான நடிப்பால் யானை மீது காட்டும் பாசம், யானையை இழந்துவிட்டு தவிப்பது, யானையை காப்பாற்ற எடுக்கும் முயற்சிகள் என அனைத்திலும் சிறப்பான நடிப்பை வெளிபடுத்துகிறார் .


சத்தத்தை ஒலிப்பதிவு செய்பவராக நடித்திருக்கும் நாயகி ஷ்ரிதா ராவ் நாயகனின் நண்பராக நடித்திருக்கும் ஆண்ட்ரூஸ், யானையை கொண்டு செல்ல வரும் அர்ஜுன் தாஸ், அரசியல்வாதியின் உதவியாளராக நடித்திருக்கும் ஆகாஷ், போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் ஹரிஷ் பெராடி என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் அனைவரும் கதைக்கு ஏற்ற தேர்வாக இருக்கிறார்கள்.


இசையமைப்பாளர் நிவாஸ் கே.பிரசன்னா இசையில் பாடல்கள் கேட்பதற்கு இனிமை. பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலம்.


எம்.சுகுமாரின் ஒளிப்பதிவு காடு, மலை, அருவி ஆகியவற்றை அழகாகவும் பிரமாண்டமாகவும் காட்சிப்படுத்தியிருக்கிறார்.


யானை மற்றும் நாயகன் இருவருக்கும் இடையே நடக்கும் பாச போராட்டத்தை மையமாக கொண்ட கதை அமைப்பில் விறுவிறுப்பான திரைக்கதை அமைப்பில் படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் பிரபு சாலமன்


ரேட்டிங்: 3.2 / 5

Comments


©2020 by MediaTalks. 

bottom of page