top of page

' தண்டேல் ' - விமர்சனம் !

  • mediatalks001
  • Feb 7
  • 2 min read



2019 ஆம் ஆண்டு கால கட்டத்தில் நடக்கும் கதையாக குஜராத் மாநிலம் அருகே உள்ள ஸ்ரீகாகுலம் என்கிற மீனவ குப்பத்தில்  நாயகன்  நாக சைதன்யா வாழ்ந்து வருகிறார் .

அதே பகுதியில் வசிக்கும் நாயகி சாய் பல்லவியும் நாக சைத்தன்யாவும் உயிருக்கு உயிராக ஒருவரை ஒருவர்  காதலித்து வருகின்றனர். 

இந்நிலையில் ஆடு களம் நரேன் தலைமையில் நாக சைதன்யாவுடன் 22 பேர் கொண்ட மீனவ குழு குஜராத்திற்கு சென்று காண்டிராக்ட் அடிப்படையில் குடும்பத்திற்காக தொடர்ந்து  9 மாத காலம்  மீன் பிடி தொழிலை செய்து வருகின்றனர். 

இந்த மீனவ குழு வருடத்தில் 3 மாத காலம் மட்டுமே சொந்த ஊரில் குடும்பத்துடன் வாழ்கின்றனர். 

தன் காதலன் மேல் உயிரை வைத்திருக்கும் சாய் பல்லவி மீன் பிடிக்க கடலுக்கு  செல்லும் நாக சைதன்யா திரும்பி வரும் வரை சுத்த சைவமாக இருந்து வருகிறார்

தன்னுடன் வாழும் மீனவ மக்களின் நலனுக்கு மிகவும் பக்க பலமாக நாக சைதன்யா இருப்பதால் மீனவ மக்களின் தண்டேலாக {தலைவனாக} மாறுகிறார். 

இந்த சூழ்நிலையில் ஊரில் உள்ள மைம் கோபி கடலுக்கு சென்ற போது எதிர்ப்பாராத விதமாக இறந்து விடுகிறார். 

இதனால் நாகசைதன்யாவுக்கும் இதே நிலைமை வந்துவிடும் என்கிற பயத்தில் சாய் பல்லவி கடலுக்கு போக வேண்டாம் என கூறுகிறார்.

ஆனால் சாய் பல்லவியின் சொல்லை கேட்காமல் அனைவரது நலனுக்காக நாக சைதன்யா கடலுக்கு செல்கிறார் .

மற்றொரு பக்கம் கோபமடையும் சாய் பல்லவி நாக சைதன்யா  காதலை நிராகரித்து கருணாகரனை திருமணம் செய்து கொள்ள பெரியவர்களின் ஆசியுடன் தேதியை நிச்சயம் செய்கிறார் .

இந்நேரத்தில் பெரும் புயலில் மாட்டிக்கொண்ட நாக சைதன்யா தெரியாமல் பாகிஸ்தான் கடல் எல்லையை கடந்து,, புயலால் படகில் தத்தளிக்கும் ஒருவனது உயிரை காப்பாற்ற,,, நாக சைதன்யா மற்றும் அவரது குழுவினர் பாகிஸ்தான் கடல் எல்லையை தாண்டியதால்  பாகிஸ்தான் கடற்படை  அனைவரையும் 

சிறைப்பிடிக்கிறது. 

முடிவில் குற்றவாளிகள் என பாகிஸ்தான் கடற்படையினர் பிடித்து சிறையில் அடைத்த நாக சைதன்யா மற்றும் அவரது குழுவினரை பாகிஸ்தான் அரசாங்கம் விடுவித்ததா ?

 நாக சைதன்யாவின் காதலை நிராகரித்த சாய் பல்லவி  இறுதியில் மீண்டும் அவருடன் ஓன்று சேர்ந்தாரா ? என்பதை சொல்லும் படம்தான் ‘’தண்டேல்’’ 


கதையின் நாயகனாக மீனவராக நடித்திருக்கும் நாக சைதன்யா மீனவர் கதாப்பாத்திரமாகவே உடல் மொழி மற்றும் பேச்சு மொழி என இயல்பான நடிப்பில் காதல் காட்சிகளிலும் , அதிரடி ஆக்க்ஷன் காட்சிகளிலும் கதையின் நாயகனாக அசத்துகிறார் .


சாய் பல்லவி மிக அற்புதமான நடிப்பில் காதலனுக்காக ஏங்குவது, காதலனை பிரிந்து இருக்கும் காட்சிகளில் உணர்வுப்பூர்வமான நடிப்பில் சத்யா என்கிற கதாபாத்திரமாக படம் முழுவதும் வாழ்கிறார் .


படத்தில் நடித்த பிரகாஷ் பெலவாடி ,திவ்யா பிள்ளை ,ராவ் ரமேஷ், கருணாகரன், 'ஆடுகளம்' நரேன் ,பப்லு பிருத்விராஜ் ,மைம் கோபி, கல்ப லதா

கல்யாணி நடராஜன், மகேஷ் அச்சந்தா, கிஷோர் ராஜு வசிஷ்டா அனைவரும் நடிப்பில்  திரைக் கதைக்கு பக்க பலமாக இருக்கின்றனர். 


தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையில் பாடல்களும்,பின்னணி இசையும்  ,ஷம்தத்- இன் ஒளிப்பதிவும்  படத்திற்கு பெரிய பலம்

 

மீனவர்களின் வாழ்க்கையுடன் காதலையும் நம் தேச பற்றையும் மையமாக கொண்ட கதையுடன் அழுத்தமான காதலுடன் படத்தை இயக்கியுள்ளார்  இயக்குனர் சந்தூ மொண்டேடி.


 அழுத்தமான காதலை இயல்பாக சொல்லும் படம் ' தண்டேல் '


ரேட்டிங் - 3.5 / 5



Comentários


©2020 by MediaTalks. 

bottom of page