top of page

'ட்ராமா’   - விமர்சனம்

  • mediatalks001
  • Mar 22
  • 2 min read

திருமணமாகி சில வருடங்கள் கடந்தும் தங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லாததால் விவேக் பிரசன்னா – சாந்தினி தமிழரசன் இருவரும் மன உளைச்சலில் இருக்கின்றனர்.


பல மருத்துவமனைகளுக்குச் சென்று சிகிச்சை எடுத்தும் அதில் எந்த வித பயனும் ஏற்படவில்லை.


இந்நிலையில் செயற்கை  கருத்தரிப்பு மையத்தின் விளம்பரம் ஒன்றை விவேக் பிரசன்னா பார்க்கிறார் . 


இதனையடுத்து  அந்த மருத்துவமனை மருத்துவர் கொடுக்கும் மருந்தை விவேக் பிரசன்னா – சாந்தினி தமிழரசன்இருவரும் உட்கொண்டு வர சில நாட்களில் சாந்தினி தமிழரசன் கர்ப்பமாகிறார்.


மற்றொரு பக்கம் ஆட்டோ ஓட்டுநர் மாரிமுத்துவின் மகள்  பூர்ணிமா ரவி ஒரு பெட்ரோல் பங்கில் வேலை பார்க்கிறார். 


பூர்ணிமா ரவியை பிரதோஷ் காதலிக்கிறார். முதலில் காதலை ஏற்க மறுத்தாலும், பின் அவர் மீது காதல் வயப்பட்டு விடுகிறார் பூர்ணிமா ரவி . 


காதல் மோகத்தால் இருவரும்   ஒன்றாக இருக்கின்றனர். இதனால், பூர்ணிமா ரவி  கர்ப்பமாகிறார்.


இதே நேரத்தில்   கார் மெக்கானிக்கான ஈஸ்வர், அவருடைய நண்பர் மூலம் கார் திருடி விற்று வருகிறார்.


ஒருநாள் இரவில் விலையுயர்ந்த காரை ஈஸ்வர் நண்பருடன் திருடி செல்லும் வழியில் போலீசில் மாட்டிக் கொள்கிறார். 


போலீஸ் இன்ஸ்பெக்டரான சஞ்சய் காரை சோதனை செய்யும் போது  கார் பின்புற டிக்கியில்  பிரதோஷ்  பிணமாக கிடக்கிறார்.


முடிவில் பிரதோஷை கொலை செய்த கொலையாளி யார் ? கொலைக்கான காரணம் என்ன? 

கர்ப்பமாக இருக்கும்  சாந்தினி தமிழரசன் --விவேக் பிரசன்னா தம்பதியருக்கு  குழந்தை பிறந்ததா? இல்லையா? என்பதை சொல்லும் படம்தான் ’ட்ராமா’  



நாயகனாக நடித்திருக்கும் விவேக்  பிரசன்னா இயல்பான நடிப்பில் உடல் மொழியில் மனைவி மீது காட்டும் அக்கறை, குழந்தை இல்லையே என்று தவிப்பது, தன் நிலை தெரிந்ததும் துடிப்பது  என சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.


விவேக்  பிரசன்னா மனைவியாக நடித்த சாந்தினி தமிழரசன் குழந்தைக்காக ஏங்கி தவிக்கும் கதாபாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வெளிபடுத்துகிறார் .


முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பூர்ணிமா ரவி மற்றும் பிரதோஷ் இருவரும் கதைக்கு ஏற்ற தேர்வாக இருக்கிறார்கள். 


விவேக் பிரசன்னாவின் நண்பராக நடித்திருக்கும் ஆனந்த் நாக் போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் சஞ்ஜீவ் மற்றும் மாரிமுத்து, பிரதீப் கே.விஜயன், ரமா என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் திரைக்கதையோட்டத்திற்கு பக்க பலம் .


ஆர் எஸ் ராஜ்பிரதாப் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை கதைக்கு ஏற்றவாறு உள்ளது. 


அஜித் ஸ்ரீனிவாசனின் ஒளிப்பதிவு கதை ஒட்டத்திற்கு ஏற்றவாறு இருக்கிறது.


இன்றைய சமுகத்தில் பல இளைய தம்பதியர் சந்திக்கும்  குழந்தையின்மை பிரச்சனையை மையமாக கொண்ட கதையுடன் செயiற்கை கருத்தரிப்பு மருத்துவமனை மூலம் நடக்கும் குற்றங்களை வைத்து ஆதரவற்ற அனாதை குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்க வேண்டும் என்ற கருத்தை அழுத்தமாக பதிவு செய்து  சஸ்பென்ஸ் கலந்த திரில்லர் படமாக படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் தம்பிதுரை மாரியப்பன் 



ரேட்டிங்  : 3  / 5



Comments


©2020 by MediaTalks. 

bottom of page