’நாங்கள்’ - விமர்சனம் !
- mediatalks001
- Apr 19
- 1 min read

ஊட்டியில் பள்ளி ஒன்றை நடத்தி வரும் அப்துல் ரஃபி மனைவி பிரார்த்தனா ஸ்ரீ காந்திடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழும் நிலையில் தனது மகன்களை ஒழுக்கத்துடன் வளர்க்க வேண்டி கண்டிப்பான தந்தையாக அவர்களிடம் நடந்து கொள்கிறார்.
பள்ளி முதல்வராக இருக்கும் அப்துல் ரஃபி தொழில் ரீதியாக ஏற்பட்ட தோல்வியால் மின்சார பில் கட்ட முடியாத காரணத்தில் வீட்டில் மின்சாரம், தண்ணீர் கூட இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர்.
மின்சாரமும் , தண்ணீரும் இல்லாத காரணத்தினால் வீட்டில் அனைத்து வேலைகளையும் மூன்று சிறுவர்களே செய்து வருகின்றனர்.
ஒரு கட்டத்தில் அப்துல் ரஃபி அளவிற்கு அதிகமான கண்டிப்பை மகன்களிடம் காட்டுகிறார்.
அப்துல் ரஃபி கண்டிப்பினால் அம்மா பிரார்த்தனா ஸ்ரீகாந்த் இருக்கும் இடத்திற்கு மூவரும் செல்ல அங்கு, மூன்று சிறுவர்களும் படிப்பிற்கான பொருளாதாரத்தை அம்மாவும் தாத்தாவும் ஏற்பாடு செய்ய முடியாத காரணத்தால் மீண்டும் அப்பா அப்துல் ரஃபி வசிக்கும் இடத்திற்கே மூன்று சிறுவர்களும் வந்து விடுகின்றனர்.
இந்நிலையில் பிரிந்து வாழ மனமில்லாமல் மீண்டும் தன் மகன்களுடன் சேர்ந்து வாழ ஆசைப்படும் அம்மா பிரார்த்தனா ஸ்ரீ காந்தை வீட்டை விட்டு வெளியேற்றுகிறார் கண்டிப்பான அப்துல் ரஃபி .
இந்நேரத்தில் தனது பள்ளியை அடுத்தவர் பொறுப்பில் ஒப்படைக்கும் அப்துல் ரஃபி ஆந்திர மாநிலத்தில் நல்ல சம்பளத்துடன் தனக்கு வேலை கிடைத்துள்ளதால் தன்னுடன் வருமாறு மூன்று மகன்களை அழைக்கிறார்.
முடிவில் கண்டிப்பான அப்பாவான அப்துல் ரஃபியுடன் மூன்று மகன்களும் சென்றார்களா? இல்லையா? என்பதை சொல்லும் படம்தான் ’நாங்கள்’
மூன்று சிறுவர்களின் அப்பாவாக நடித்திருக்கும் அப்துல் ரஃபி இயல்பான நடிப்பில் . கண்டிப்பு, கோபம், பாசம் என அனைத்தும் கலந்த குணசித்திர நடிகராக சிறப்பான நடிப்பை வெளிபடுத்துகிறார்
மூன்று சகோதரர்களாக நடித்திருக்கும் சிறுவர்கள் மித்துன், ரித்திக் மோகன், நித்தின்.டி ஆகியோர் கதைகேற்றபடி இயல்பாக நடிக்கின்றனர்
சிறுவர்களின் அம்மாவாக நடித்திருக்கும் பிரார்த்தனா ஸ்ரீகாந்த், தாத்தாவாக நடித்திருக்கும் ஷாப் ஜான் எடத்தட்டில் மற்றும் கேத்தி என்ற நாய் என படத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற தேர்வாக இருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் வேத் சங்கர் சுகவனத்தின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதையோடு பயணிக்கிறது.
அவினாஷ் பிரகாஷ் ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம்.
கண்டிப்புமிக்க அப்பா மற்றும் தாயை பிரிந்து வாழும் மகன்களுக்கு இடையே நடக்கும் வாழ்க்கையை மையமாக கொண்ட கதையுடன் உணர்வுப்பூர்வமான திரைக்கதை அமைப்புடன் படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் அவினாஷ் பிரகாஷ் .
ரேட்டிங் - 3 / 5
Comentarios