top of page

’வல்லமை’ - விமர்சனம்

  • mediatalks001
  • Apr 25
  • 2 min read

விவசாயியான  மனைவியை இழந்த பிரேம்ஜி அரியலூரில் மகள் சிறுமி திவதர்ஷினியுடன் வாழ்ந்து வருகிறார்.  தனது 8 வயது மகளான  பெண் பிள்ளையை நன்றாக படிக்க வைத்து சமுதாயத்தில் பெரிய நிலையை மகள் அடைய வேண்டும் என்கிற நோக்கத்தில்  சென்னை வருகிறார்.


சென்னையில் வாடகை வீடு, வேலை, மகளின் பள்ளி படிப்பு என அனைத்தும் அவர் நினைத்து போல் நடக்கிறது.

இந்நிலையில்  மகளை அரசு பள்ளியில் சேர்த்து படிக்க வைக்கிறார்.


சென்னையில் ஆட்டோ ஓட்டும் நபரின் மூலம்   சினிமா போஸ்டர் ஓட்டும் வேலை கிடைக்கிறது


பிரேம்ஜியும் அவரது மகளும் கிடைக்கும் வருமானத்தில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள்.  


இந்நேரத்தில் ஒரு நாள் பள்ளியில் இருந்து மகளை வீட்டிற்கு அழைத்து வரும் போது, தனக்கு பிறப்புறுப்பில் வலி இருப்பதாக பிரேம்ஜியிடம் கூற, மகளை உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறார் பிரேம்ஜி.


அங்கு, மகளை பரிசோதித்து பார்த்த மருத்துவர் தீபா சங்கர் மயக்க மருந்து கொடுத்து மகளிடம் பாலியல் வன்கொடுமை  துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளார் என பிரேம்ஜியிடம் கூறுகிறார். 


இதனையடுத்து பாலியல் வன்கொடுமை செய்து இந்த நிலைமைக்கு ஆளாக்கிய குற்றவாளியை கண்டு பிடித்து கொலை செய்ய வேண்டும்  என இருவரும் முடிவு செய்கிறார்கள்.


முடிவில் பிரேம்ஜி மகளுடன் சேர்ந்து வன்கொடுமை  செய்த  காமக்  கொடூரனான மர்ம குற்றவாளியை கண்டுபிடித்தாரா?

அவரை கொலை செய்யும் முயற்சியில் பிரேம்ஜி வெற்றி பெற்றாரா ? இல்லையா?  என்பதை சொல்லும் படம்தான் ’வல்லமை’ .


பள்ளி பருவ மகளின் தந்தையாக நடித்திருக்கும் பிரேம்ஜி வழக்கமான பாணியில் நடிக்காமல் கதையுடன் இணைந்து இயல்பான நடிப்பில் சிறப்பான நடிப்பை வெளிப் படுத்தியுள்ளார்.

காது கேளாத  செவித்திறன் இல்லாதவராகவும் ,மகளுக்காக எதையும் செய்யும்  மனநிலை கொண்ட கதாபாத்திரத்தில் பாராட்டும்படி நடித்துள்ளார் .


பிரேம்ஜியின் மகளாக நடித்திருக்கும் சிறுமி திவதர்ஷினி, துணிச்சலான அதே நேரம் சவாலான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். கொடுத்த வேலையை குறைவில்லாமல் செய்திருக்கிறார்.


போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் ’வழக்கு எண்’ முத்துராமன், மருத்துவராக தீபா சங்கர் ,போலீஸ் கான்ஸ்டபிளாக நடித்திருக்கும் சூப்பர் குட் சுப்பிரமணியம், தொழிலதிபராக நடித்திருக்கும் சி.ஆர்.ரஜித், கார் ஓட்டுநராக நடித்திருக்கும் சுப்பிரமணியன் மாதவன், பெட்ரோல் திருடும் இளைஞராக நடித்திருக்கும் விது, பள்ளி உதவி பணியாளராக நடித்திருக்கும் திலீபன் என படத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற தேர்வாக இருக்கிறார்கள்.


இசையமைப்பாளர் ஜி.கே.வி இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை கதையோடு பயணிக்கிறது. 


சூரஜ் நல்லுசாமி ஒளிப்பதிவு படத்திற்கு பக்க பலம் 


இன்றைய சமூகத்தில் தினமும்  ஏதோ ஒரு இடத்தில் நடைபெறும் அவலமான பள்ளி பருவ பெண் குழந்தைகளுக்கு நடக்கிற பாலியல் துன்புறுத்தல்களை அடிப்படையாக வைத்து பாதிக்கப்படும்  பெண் பிள்ளைகள்  உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் அனுபவிக்கும் வலியை அழுத்தமாக திரைக்கதையில்  பதிவு செய்து பாதுகாப்பற்ற நிலையில் வாழும் தற்போதைய காலக்கட்டத்தின் நிலைமையை பெற்றோர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பாராட்டும்படி படத்தை தயாரித்து  கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்கியுள்ளார் இயக்குனர்  கருப்பையா முருகன்.


ரேட்டிங் - 3 / 5






Comments


©2020 by MediaTalks. 

bottom of page