’டூரிஸ்ட் ஃபேமிலி’ - விமர்சனம்
- mediatalks001
- May 3
- 1 min read

பொருளாதார பாதிப்பினால் இலங்கையில் வாழும் மக்களுக்கு ஏற்படும் கடுமையான விலைவாசி உயர்வால் இலங்கை தமிழர் சசிகுமார் தனது மனைவி சிம்ரன் மற்றும் 2 மகன்களுடன் அங்கிருந்து யாருக்கும் தெரியாமல் படகில் ஏறி கடல் வழியாக இலங்கை அகதிகளாக தமிழக எல்லையான ராமேஸ்வரம் வருகிறார்கள்.
சசிகுமாரை குடும்பத்துடன் அழைத்துச் செல்ல சிம்ரனின் அண்ணனான யோகிபாபு,அங்கு காத்திருக்கிறார்.
அந்த நேரத்தில் அங்கு வரும் போலீஸ் கான்ஸ்டபிள் ரமேஷ் திலக் விசாரணைக்காக வேனில் அழைத்து செல்ல சசிகுமாரின் கதையை கேட்டு அனைவரையும் விடுவிக்கிறார் ..
இதனையடுத்து சென்னை வரும் சசிகுமாரின் குடும்பம் வேளச்சேரி போலீஸ் அதிகாரியாக இருக்கும் பக்ஸ்க்கு சொந்தமான விட்டில் வாடகைக்கு குடியேறுகின்றனர்.
வீட்டின் அருகில் குடியிருக்கும் அனைவரிடமும் பாசமாக பழகுகிறார்கள் சசிகுமாரின் குடும்பம்.
எதிர் வீட்டில் குடியிருக்கும் எம் எஸ் பாஸ்கரிடம் கார் டிரைவராக வேலை பார்க்கிறார் சசிகுமார் .
இந்நேரத்தில் சசிகுமாரின் குடும்பம் ராமேஸ்வரத்திற்கு வந்த அதே நாளில் அங்கு இருக்கும் ஒரு கோயில் அருகே குண்டுவெடிப்பு சம்பவம் ஒன்று நடக்க, இதற்கும் சசிகுமாரின் குடும்பத்திற்கு தொடர்பு இருப்பதாக போலீஸ் மேலிடம் நினைக்க அவர்களைத் தேடி கைது செய்ய தனி படை அமைத்து போலீஸ் சென்னை வருகிறது
முடிவில் சென்னையில் வாழும் சசிகுமாரையும் அவரது குடும்பத்தையும் போலீஸ் கைது செய்தார்களா?
குண்டு வெடிப்பு பிரச்சனையில் இருந்து சசிகுமார் மீண்டு வந்தது எப்படி ? என்பதை சொல்லும் படம்தான் ’டூரிஸ்ட் ஃபேமிலி’
குணசித்திர நடிப்பில் இலங்கை தமிழராக நடித்திருக்கும் சசிகுமார் கதையுடன் இணைந்து நடிப்பு, பேச்சு , காமெடி என அனைத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
சசிகுமாரின் மனைவியாக நடித்திருக்கும் சிம்ரன் மற்றும் ,சசிகுமார் – சிம்ரன் தம்பதியின் மூத்த மகனாக நடித்திருக்கும் மிதுன் ஜெய்சங்கர் மற்றும் இளைய மகனாக நடித்திருக்கும் கமலேஷ் கதைகேற்றபடி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்
எம் எஸ் பாஸ்கர், ரமேஷ் திலக், பக்ஸ், இளங்கோ குமரவேல், ஸ்ரீஜா ரவி, யோகலக்ஷ்மி என படத்தில் நடித்த அனைவருமே கதைக்கு ஏற்ற நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.
ஷான் ரோல்டன் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு பக்க பலம்.
அரவிந்த விஸ்வநாதன் ஒளிப்பதிவு கதையோடு பயணிக்கிறது.
இலங்கையில் வாழும் ஈழத் தமிழர்களின் இன்றைய நிலையை அடிப் படையாக கொண்டு இலங்கை அகதிகளாக சென்னையில் வாழும் ஒரு குடும்பத்தின் கதையை மையமாக வைத்து குடும்ப பாங்கான படமாக அனைவரும் ரசிக்கும்படி திரைப்படத்தை உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் அபிஷன் ஜீவிந்,
ரேட்டிங் : 3.5 / 5
Comments