top of page

பிரம்மாண்டமான புராண காவிய கதைக்காக மீண்டும் இணையும் நடிகர் அல்லு அர்ஜூன் மற்றும் இயக்குநர் திரிவிக்ரம்

  • mediatalks001
  • 3 hours ago
  • 1 min read

ree

பிரம்மாண்டமான புராண காவிய கதைக்காக மீண்டும் இணையும் நடிகர் அல்லு அர்ஜூன் மற்றும் இயக்குநர் திரிவிக்ரம்!


ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் மற்றும் புகழ்பெற்ற இயக்குநர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இருவரும் ஒரு அற்புதமான புராண காவிய கதைக்காக மீண்டும் இணைய இருக்கிறார்கள். இது அவர்கள் இணைந்து பணிபுரிய இருக்கும் நான்காவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் அல்லு அர்ஜூனுக்காகவே உருவாக்கப்பட்ட கதை இது என்பதால் ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினர் மிகுந்த உற்சாகத்தோடு இந்தப் படத்தை எதிர்பார்த்துள்ளனர்.


அல்லு அர்ஜுன் மற்றும் திரிவிக்ரம் ஆகியோர் கூட்டணி இதற்கு முன்பு பல பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்துள்ளது. அவர்களின் முந்தைய படமான 'அலா வைகுந்தபுரமுலூ' தென்னிந்தியா முழுவதும் பல பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளை முறியடித்து ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்ட படமாக இருந்தது.


திரைத்துறையில் வெளியான தகவல்களின்படி, இந்தப் படம் இந்திய சினிமா இதுவரை பார்த்திராத அளவு பிரம்மாண்டமான புராண கதையாக ரூ. 1000 கோடி பட்ஜெட்டில் உருவாக இருக்கிறது. வலுவான கதைசொல்லல், பிரமாண்டமான காட்சிகள் மற்றும் அதிநவீன தொழில்நுட்பத்துடன் இந்திய மற்றும் உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களுக்கு இதுவரை பார்த்த புராண படங்களை மறுவரையறை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


பிப்ரவரி 2027ல் வெளியிட திட்டமிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வாரங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அல்லு அர்ஜூன் மற்றும் திரிவிக்ரம் கூட்டணி இந்திய சினிமாவில் புதிய மைல்கல்லை எட்டிப் பிடிக்கும் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Comments


©2020 by MediaTalks. 

bottom of page