top of page

டிஎன்பிபிஎல் இரண்டாவது சீசனில் ஊட்டி பைசன்ஸ் அணியுடன் விளையாட்டு அரங்கில் களமிறங்கும் கீதம்!

mediatalks001
2 days ago
1 min read

Updated: 1 day ago




தமிழ்நாடு பிக்கிள்பால் பிரீமியர் லீக் சீசன் 2 போட்டியில் பங்கேற்கும் ஊட்டி பைசன்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ ஃபிரான்சைஸ் உரிமையாளராக, போட்டி விளையாட்டுத் துறையில் தனது பயணத்தைத் தொடங்குகிறது கீதம்.


நீலகிரி மலைப்பகுதியின் வேர்களையும், காட்டெருமையின் வலிமை மற்றும் விடாமுயற்சியையும் முன்மாதிரியாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த அணி, ஆண்கள் மற்றும் பெண்கள் என மொத்தம் 14 விளையாட்டு வீரர்களுடன் களமிறங்குகிறது. போட்டியில் முழு அர்ப்பணிப்புடன் பங்கேற்பதோடு, ஆடுகளத்திலும் அதற்கு வெளியிலும் தங்களுக்கென அடையாளத்தை உருவாக்குவதே இந்த அணியின் இலக்காகும்.


கீதத்தைப் பொறுத்தவரை, ஊட்டி பைசன்ஸ் அணி என்பது விருந்தோம்பல் துறைக்கு அப்பாற்பட்ட புதிய அத்தியாயமாகும். வளர்ந்து வரும் பிக்கிள்பால் விளையாட்டுக்கு பங்களிப்பதுடன் சமூகம், கலாச்சாரம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றை மையமாகக் கொண்ட ஒரு அணியை உருவாக்குவதற்கான வாய்ப்பாகவும் இது அமைகிறது.


“ஊட்டி பைசன்ஸ் அணி மூலம் புதிய களத்தில் எங்கள் பயணத்தைத் தொடங்குகிறோம். கடுமையாகப் போட்டியிடும் ஓர் அணியை உருவாக்க வேண்டும், நீலகிரி மக்களின் பெருமையைப் பிரதிபலிக்க வேண்டும், போட்டியைத் தாண்டியும் மக்கள் தங்களுடன் தொடர்புபடுத்திக் கொள்ளக்கூடிய ஓர் அடையாளத்தை உருவாக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்” என்கிறது கீதம்.


கீதம் வெஜ் வழங்கும் ஊட்டி பைசன்ஸ்!


டிஎன்பிபிஎல் சீசன் 2க்குத் தயாராகி வரும் ஊட்டி பைசன்ஸ் அணி, 'கூட்டமாக எழுவோம், கடுமையாக போட்டியிட்டு வெற்றி பெறுவோம்!' என்ற தனது கொள்கையை ஆடுகளத்தில் வெளிப்படுத்தத் தயாராக உள்ளது.

Comments


©2020 by MediaTalks. 

bottom of page