‘நீல நிற சூரியன்' - விமர்சனம் !
- mediatalks001
- Oct 5, 2024
- 1 min read
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சியில் சம்யுக்தா விஜயன் ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக இருக்கிறார். சிறு வயது முதல் உடல் மொழியின் மாற்றத்தால் இவருக்குள் தான் ஒரு பெண்ணாக ஆக வேண்டும் என்ற எண்ணம் ஓடிக் கொண்டே இருக்கிறது.ஆசிரியர் ஆன பிறகு சிகிச்சை மூலம் பெண்ணாக மாற நினைக்கிறார்.
இதனையடுத்து பெண் போன்று சேலை அணிந்து வர பள்ளி தலைமை இடத்தில் அனுமதி கேட்க , பள்ளி தலைமையாசிரியர் அதற்கு ஒப்புதல் அளிக்க மறுக்கிறார். பள்ளியின் தாளாளர், இதற்கு சம்மதம் தெரிவிக்கிறார்
இந்நேரத்தில் தனது முடிவை வீட்டில் கூற, முதலில் ஏற்க மறுக்கும் பெற்றோர்களான கஜராஜ் - கீதா கைலாசம் பின்னர் அவர்களின் ஒரே மகன் என்பதால் ஏற்றுக் கொள்கின்றனர். ஆனால், சொந்த பந்தங்கள் ஏற்க மறுக்கிறார்கள் இந்நிலையில்.ஆணாக இருந்த சம்யுக்தா விஜயன் பெண்ணாக சேலை அணிந்து கொண்டு பள்ளிக்கு செல்கிறார்.
முடிவில் பள்ளி மாணவர்கள் ஆணாக பார்த்த சம்யுக்தா விஜயனை சேலை அணிந்த பெண்ணாக ஏற்றுக் கொண்டார்களா ? இறுதியில் சமூகம் உட்பட குடும்பத்தினர் திருநங்கையாக ஏற்று கொண்டார்களா ? இல்லையா ? என்பதை சொல்லும் படம்தான் ‘நீல நிற சூரியன்'
அரவிந்த் மற்றும் பானு என்ற இரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சம்யுக்தா விஜயன் இரண்டு கதாபாத்திரங்களிலும் வேறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தி கதையுடன் இணைந்து சிறப்பான நடிப்பை அழகாகவெளிப்படுத்தியிருக்கிறார்.
சம்யுக்தா விஜயன் அப்பா, அம்மாவாக நடித்திருக்கும் கஜராஜ் - கீதா கைலாசம், சித்தப்பாவாக வரும் பிரசன்னா பாலசந்திரன் துணை தலைமை ஆசிரியராக வரும் மணிமேகலை,, மருத்துவராக வரும் கிட்டி என படத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற தேர்வாக இருக்கிறார்கள்.
ஒளிப்பதிவு & எடிட்டர் & இசை: ஸ்டீவ் பெஞ்சமின் அனைத்து பணிகளும் கதையோடு பயணிக்கிறது . பின்னணி இசை கதைக்கு பலம் சேர்க்கிறது. ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலமாக உள்ளது.
IFFI -23, மற்றும் பல உலக திரைப்பட விழாக்களில் பங்கு பெற்று, உலக சினிமா ரசிகர்கள் மட்டுமில்லாமல் நல்ல சினிமாக்களை விரும்பும் அனைவரும் பாராட்டிய படம் தான் ‘நீல நிற சூரியன்'
உண்மை சம்பவத்தை மையமாக வைத்து முற்றிலும் மாறுபட்ட கதையை அழகாக கையாண்டு சொல்ல வந்த கருத்தை அழகாகவும் எளிமையாகவும் சொல்லியிருக்கும் இயக்குனர் சம்யுக்தா விஜயனுக்கு பாராட்டுக்கள்.
ரேட்டிங் - 3 / 5
Comments