top of page

’ஆரகன் ' - விமர்சனம் !

  • mediatalks001
  • Oct 5, 2024
  • 1 min read

நாயகன் மைக்கேல் தங்கதுரையும் நாயகி கவிபிரியாவும்,ஒருவரை ஒருவர் காதலிக்கிறார்கள்.

இந்நிலையில்  காதலியான கவிபிரியா தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு மைக்கேலிடம் வற்புறுத்த ஆனால் மைக்கேல் சொந்தமாக தொழில் தொடங்கிய பிறகு நமது திருமணம் என சொல்லி விடுகிறரர்.


இந்நிலையில் மலைப்பிரதேசம் ஒன்றில் உள்ள வீட்டில் நோய்வாய்ப்பட்டு தனிமையில் வசிக்கும் நடுத்தர பெண்மணி ஸ்ரீரஞ்சனியை பார்த்துக் கொள்ளும் பணிக்கு செல்ல கவிபிரியா முடிவு செய்கிறார்.

நினைத்து பார்க்க முடியாத சம்பளமாக மாதம்  ரூ,70 ஆயிரம் சம்பளம் என்பதால் சந்தேகம் அடையும் மைக்கேல் தங்கதுரை, கவிபிரியாவை அங்கு செல்ல விடாமல்தடுக்க ,,,அவரது பேச்சை கேட்காமல் அவர் அங்கு செல்கிறார்.


அங்கு செல்போன் டவர் கிடைக்காத, ஆள்நடமாட்டம் இல்லாத அடர்ந்த வனப்பகுதிக்குள் இருக்கும் அந்த பங்களா மர்மமாக இருக்க, அந்த வீட்டில் இருக்கும் பொருட்களும் மர்மம் நிறைந்தவைகளாக இருப்பதோடு, முகம் பார்க்கும் கண்ணாடி வைத்துக் கொள்ளாமல் இருக்கிறார் ஸ்ரீ ரஞ்சனி அந்த வீட்டில் சில அமானுஷ்ய சம்பவங்கள் நடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார் நாயகி கவிபிரியா


இதே வேளையில் வயது முதிர்ந்த கலைராணி கை  மற்றும் கால்கள் சங்கலியால் கட்டப்பட்ட நிலையில் ஒரு வீட்டில் அடைக்கப்பட்டு இருக்கிறார். ஒரு கட்டத்தில் நாயகி கவிபிரியா வயது முதிர்ந்த கலைராணியை சந்திக்க பல அதிர்ச்சிகரமான தகவல் கிடைக்கின்றன.


முடிவில் நாயகி கவிபிரியா அந்த மர்ம பங்களாவில் இருந்து தப்பி சென்றாரா? நோய் வாய் பட்டு உடல்நிலை முடியாத ஸ்ரீ ரஞ்சனி யார்?  என்பதை சொல்லும் படம்தான் ’ஆரகன் '

நாயகனாக நடித்திருக்கும் மைக்கேல் தங்கதுரை இயல்பான நடிப்பில் காதல், பாசம், ரொமான்ஸ் தவிர ஏதிர்மறை கதாபாத்திரத்திலும் அனுபவ நடிகராக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.


மகிழ்நிலா என்ற கதாபாத்திரத்தில் அழகான இயல்பாக நடித்திருக்கும் கவிபிரியா மனோகரன் ரசிகர்களின் மனதை கவரும் நடிப்பில் ஜொலிக்கிறார் .


இதுவரை நடித்திராத கதாபாத்திரத்தில் கண்களாலே மிரட்டும் ஸ்ரீரஞ்சனி,  கலைராணி . யாசர், ஆதித்யா கோபி , ப்ரீத்தம் சக்ரவர்த்தி ,கிருஷ்ணன் ,முருகானந்தம் ,ஆர்த்தி , மெர்சல் ராஜா ,கௌரி என மற்ற கதாபாத்திரத்தில் நடித்த அனைவரும்  கதைக்கு ஏற்ற தேர்வாக இருக்கிறார்கள்.


இசையமைப்பாளர்கள் விவேக் - ஜெஷ்வந்த் இசையில் பாடல்கள் கேட்பதற்கு இனிமை பின்னணி இசை கதையோடு பயணிக்க வைக்கிறது.  சூர்யா வைத்தி ஒளிப்பதிவு அடர்ந்த காடுகள் மற்றும் மலை பகுதிகளை அழகாகவும் பிரமாண்டமாகவும் காட்சிப்படுத்தியிருக்கிறார்.


இரண்டு கதாபாத்திரங்களை மையமாக வைத்து மர்மமான வீட்டுக்குள் நடக்கும் கதையை, விறு விறுப்பான திருப்பங்கள் கொண்ட திரைக்கதையுடன் அனைவரும் ரசிக்கும் வகையில் படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் அருண் கே ஆர்


ரேட்டிங் - 3 / 5

Comments


©2020 by MediaTalks. 

bottom of page