‘டெவில்’ திரைப்பட விமர்சனம்
- mediatalks001
- Feb 2, 2024
- 1 min read
பெற்றோர்கள் பார்த்து நிச்சயிக்கப்பட்ட திருமணமாக மாப்பிள்ளை விதார்த்துடன் நாயகி பூர்ணாவின் திருமணம் நடைபெறுகிறது .
வக்கீலாக இருக்கும் வித்தார்த் திருமணத்திற்கு முன்பே தன்னுடன் வேலை பார்க்கும் சுபஶ்ரீயின் அழகில் மயங்கி அவர் மீது காதல் கொள்ள காதல் உறவில் இருவரும் தனிமையில் அடிக்கடி சல்லாபத்தில் ஈடுபடுகின்றனர் .
ஒரு கட்டத்தில் இருவரும் ஒன்றாக இருக்கும் நேரத்தில் பூர்ணா பார்த்து விட ,,,,, அதிர்ச்சியாகும் பூர்ணா விதார்த்துடன் சண்டை போட்டு காரில்
சென்று கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக திரிகுன் பைக் மீது கார் மோதி விபத்து ஏற்படுகிறது.
இதில் திரிகுனுக்கு கையில் எலும்பு முறிவு ஏற்படுகிறது. விபத்தில் கை உடைந்த நிலையில் ஆதரவில்லாமல் தனிமையில் இருக்கும் திரிகுனுக்கு துன்பத்தை ஏற்படுத்திய பூர்ணாவுக்கு இது குற்ற உணர்வாக மாறுகிறது. இதனால் திரிகுனுக்கு ஆதரவாக அடிக்கடி அவரை சந்திக்கிறார். தன் அம்மாவின் அரவணைப்பில் பூர்ணாவை பார்க்கும் திரிகுனுக்கு பூர்ணாவின் மேல் காதல் ஏற்படுகிறது.
இந்நிலையில் தன் ஆசை நாயகி மற்றொரு நபருடன் தொடர்பில் இருப்பதை தெரிந்து கொள்ளும் நாயகன் விதார்த் மனம் திருந்தி பூர்ணாவை தேடி வருகிறார்.
முடிவில் மனம் திருந்தி தேடி வரும் விதார்த்தை நாயகி பூர்ணா ஏற்று கொண்டு சேர்ந்து அவருடன் வாழ்ந்தாரா?
பூர்ணாவின் அழகில் மயங்கி காதல் வயப்பட்ட திரிகுனின் காதல் ஆசை நிறைவேறியதா ? என்பதை சொல்லும் படம்தான் 'டெவில்'
திருமணமான பெண்ணாக நாயகி பூர்ணா இயல்பான நடிப்பில் உடல் மொழியில் ஒவ்வொரு அசைவுகளிலும் வெகுளி , ஏக்கம், தவிப்பு, காதல்,அலறல், கோபம், தடுமாற்றம் என பல பரிணாமங்களில் உணர்வுபூர்வமாக கதையின் நாயகியாக படம் முழுவதும் பாராட்டும்படியான நடிப்பில் வாழ்கிறார்
பூர்ணாவின் கணவராக நடிக்கும் விதார்த் இதுவரை ஏற்காத கதாபாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் .
மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் திரிகுன் துடி துடிப்புள்ள இளைஞனாக பூர்ணாவின் மேல் காதல் வயப்படும் வாலிபனாக எதார்த்த நடிப்பில் மிளிர்கிறார்
ஒளிப்பதிவாளர் கார்த்திக் முத்துக்குமாரின் ஒளிப்பதிவும் ,இசையமைப்பாளர் மிஷ்கினின் இசையும் படத்திற்கு பக்க பலம் .
மனம் தடுமாறி சூழ்நிலை காரணமாக தடம் மாறும் மூன்று கதாபாத்திரங்களின் கதையை மையமாக வைத்து ஆபாச கலப்பில்லாத திரைக்கதை அமைப்புடன் யாரும் எதிர்பார்த்த திருப்புமுனையான கிளைமாஸ்க்குடன் ரசிகர்களுக்கு திகிலான திரில்லர் படத்தை பார்த்த உணர்வை ஏற்படுத்துகிறார் படத்தை இயக்கிய இயக்குனர் ஆதித்யா.
ரேட்டிங் ; 3.5 / 5
留言