அம்.. ஆ - 3.5 / 5 விமர்சனம்
- mediatalks001
- Apr 18
- 1 min read

கேரள மாநிலத்தில் உள்ள மலை பிரதேசத்தில் பால் வாடி பள்ளியில் படிக்க இருக்கும் ஒரு பெண் குழந்தையுடன் வாழ்ந்து வருகிறார் தேவதர்ஷினி..
இந்நிலையில் அந்த மலைப் பகுதியில் ரோடு போட காண்ட்ராக்ட் கிடைத்திருப்பதாக சொல்லி தெரிந்த நபரின் தயவில் அந்த சிறிய கிராமத்தில் தங்குகிறார் திலீஷ் போத்தன் .
அதே கிராமத்தில் கண் பார்வையற்ற பெரியவர் ஒருவரை டீ க் கடையில் அடிக்கடி திலீஷ் போத்தன் சந்திக்க ,,, ஒரு கட்டத்தில் தேவதர்ஷினியை பற்றியும் அவரிடம் வளரும் குழந்தையை பற்றியும் அவரிடம் திலீஷ் போத்தன் விசாரிக்க ,,,கோபமான பெரியவர் திலீஷ் போத்தன் நிஜமான ரோடு காண்ட்ராக்டர் அல்ல என்பது தெரிந்தவுடன் கடையை விட்டு விரட்டுகிறார் .
இதன் பின் தேவதர்ஷினி சம்பந்தப்பட்ட அனைவரிடமும் அவர் விசாரணையை தொடங்கும்போது உண்மையான ரோடு காண்ட்ராக்டர் அல்ல திலீஷ் போத்தன் போலீஸ் அதிகாரி என தெரிய வருகிறது .
முடிவில் தேவதர்ஷினியுடன் வளரும் பெண் குழந்தை யார்?
என்ன காரணத்திற்காக திலீஷ் போத்தன் அவரை தேடி அந்த மலை பகுதிக்கு வருகிறார் ?
இறுதியில் போலீசின் பிடியில் தேவதர்ஷினி சிக்கி கொண்டாரா ? இல்லையா ? என்பதை சொல்லும் படம்தான் அம்.. ஆ
கதையின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் தேவதர்ஷினி குணசித்திர நடிப்பில் உணர்வுபூர்வமாக கதையுடன் இணைந்து சிறப்பான நடிப்பை வெளிபடுத்துகிறார் .
இயல்பான நடிப்பில் போலீஸ் அதிகாரியாக வரும் திலீஷ் போத்தன்.
சிறிய கதாபாத்திரத்தில் மீரா வாசுதேவன் மற்றும் உடன் நடித்த மற்ற நடிகர்கள் அனைவரும் திரைக்கதைக்கு பக்க பலம் .
கோபி சுந்தரின் இசையும் ,அனிஷ் லால் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்க பலம் .
தேவதர்ஷினி அவரிடம் வளரும் குழந்தை அந்த குழந்தையின் உண்மை நிலை,, இந்த கதையை மையமாக கொண்டு வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றெடுக்கும் தம்பதிகள் குழந்தை ஊனமாகப் பிறந்தால் அக் குழந்தையை ஏற்க மறுக்கும் நிலைமை.,வாடகை தாயின் தாய்மை உணர்வான வேதனை என அழுத்தமான திரைக்கதை அமைப்பில் யாரும் யூகிக்க முடியாத எதிர்பாராத கிளைமாக்ஸுடன் அனைவரும் பாராட்டும்படி படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் தாமஸ் செபாஸ்டியன்
ரேட்டிங் - 3.5 / 5
Comments